முன்னாள் பணிப்பெண் பார்டி லியானி இரண்டு துணை அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மீது அளித்த புகாரின் தொடர்பில் நான்கு நாட்களாக விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரகசியமாக நடத்தப்பட்ட நீதிமன்ற விசாரணை, இம்மாதம் ஆறதாம் தேதியிலிருந்து ஒன்பதாம் தேதி வரை நடைபெற்றது. 47 வயது திருவாட்டி லியானி, மெய்நிகர் வாயிலாக சாட்சியளித்தார்.
இவ்வாண்டு ஜனவரி மாதம் திருவாட்டி லியானி இந்தோனீசியாவிற்குத் திரும்பினார். அதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு, தனது முன்னாள் முதலாளியிடமிருந்து அவர் திருடவில்லை என்பது நிரூபிக்கப்பட்டது.

