அன்றாடத் தொற்று 1,457

அன்றாடத் தொற்று 1,457

2 mins read
5c5b51f9-c044-4629-a8ef-bec664883d01
-

சிங்­கப்­பூ­ரில் புதி­தாக 1,457 பேருக்கு கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ள­தாக சுகா­தார அமைச்சு புதன்­கி­ழமை (செப்­டம்­பர் 22) இரவு வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

கடந்த ஆண்டு ஏப்­ரல் 20ஆம் தேதி 1,426 பேருக்­குத் தொற்று உறு­தி­யாகி இருந்­ததே ஆக அதிக ஒரு­நாள் கொவிட்-19 பாதிப்­பாக இது­வரை இருந்­தது. இதற்­கி­டையே, கொவிட்-19 தொற்­றால் ஏற்­பட்ட உடல்­ந­லப் பிரச்­சி­னை­கள் கார­ண­மாக 50 வயது ஆட­வர் உட்­பட மூன்று சிங்­கப்­பூ­ரர்­கள் உயி­ரி­ழந்­துள்ள­னர்.

அந்த 50 வயது ஆட­வர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­வில்லை. அவ­ருக்கு மருத்­து­வப் பிரச்­சி­னை­கள் இருந்­த­தாக தெரி­ய­வில்லை. இங்கு கொவிட்-19 கார­ண­மாக உயி­ரி­ழந்த ஆக இளை­ய­வர் ஆவார். இரண்­டா­ம­வர், 65 வயது ஆட­வர். புதன்­கி­ழமை அவர் உயி­ரி­ழந்­தார். இம்­மா­தம் 1ஆம் தேதி அவ­ருக்கு கொவிட்-19 தொற்று உறு­தி­யா­னது. அவர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­வில்லை. அவ­ருக்கு நீரி­ழிவு நோய், இறு­திக்­கட்ட சிறு­நீ­ர­கச் செய­லி­ழப்பு, உயர் ரத்த அழுத்­தம் ஆகிய மருத்­து­வப் பிரச்­சி­னை­கள் இருந்­தன.

மூன்­றா­ம­வர், 90 வயது மாது. அவர் செவ்­வாய்க்­கி­ழமை உயி­ரி­ழந்­தார். இம்­மா­தம் 13ஆம் தேதி அவ­ருக்­குத் தொற்று உறு­தி­யா­னது. அவர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்டவர். அவ­ருக்­குப் பக்­க­வா­தம், ஆஸ்­துமா, உயர் ரத்த அழுத்­தம், உயர் ரத்­தக் கொழுப்பு ஆகிய மருத்­து­வப் பிரச்­சி­னை­கள் இருந்­தன. அவ­ருக்கு இருந்த நோய்களுடன் வயது முதிர்ச்சியும் அவர் கடு­மை­யாக நோய்­வாய்ப்­பட கார­ண­மாக இருந்­தது என்று அமைச்சு கூறி­யது.

கடந்த இரு மாதங்­களில் மட்­டும் கொவிட்-19 தொற்று கார­ண­மாக 31 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். பெருந்­தொற்று தொடங்­கி­ய­தி­லி­ருந்து சிங்­கப்­பூ­ரில் இது­வரை பதி­வா­கி­யுள்ள மொத்­தம் 68 மர­ணங்­களில் இது கிட்­டத்­தட்ட பாதி அள­வா­கும். உள்­ளூ­ரில் புதன்­கி­ழமை (செப்­டம்­பர் 22) கிரு­மித்­தொற்­றுக்கு ஆளான அந்த 1,457 பேரில் சமூக அள­வில் 1,277 பேரும் வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­களில் 176 பேரும் அடங்­கு­வர். எஞ்­சிய நால்­வர், வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூர் வந்­த­வர்­கள்.

கொவிட்-19 கிரு­மி­யு­டன் வாழும் நிலையை நோக்கி சிங்­கப்­பூர் செல்­லும் வேளை­யில், பெரிய கிரு­மித்­தொற்று அலையை நாடு எதிர்­கொள்­ளும் என அதி­கா­ரி­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

மருத்­து­வ­ம­னை­களில் தற்­போது 1,083 பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

நேற்று முன்­தின நில­வ­ரப்­படி, இந்த எண்­ணிக்கை 1,109ஆக இருந்­தது. 145 பேருக்­குச் செயற்கை உயிர்­வாயு தேவைப்­படு­கிறது. நேற்று முன்­தின நில­வ­ரப்­படி, இந்த எண்­ணிக்கை 147ஆக இருந்­தது.

தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 19 பேர் உள்ளனர். நேற்று முன்தின நிலவரப்படி, இந்த எண்ணிக்கை 17ஆக இருந்தது.