தனது மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் பலமுறை தாக்கிய ஆடவருக்கு ஆறு மாதங்கள் இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி, தன் மீதிருந்த தனிநபர் பாதுகாப்பு ஆணையையும் மீறியிருக்கிறார்.
அவர் ஒருமுறை பூட்டைக் கொண்டு தனது மகனின் முதுகில் பலமுறை அடித்திருக்கிறார். மகன் உயிரிழக்கும் வரை அவ்வாறு செய்வதை நிறுத்தப்போதில்லை என்றும் கூறியிருக்கிறார்.
வேண்டுமென்றே தனது குடும்பத்தாருக்குக் காயம் ஏற்படுத்தியதன் தொடர்பில் சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளை 54 வயது சிங்கப்பூரரான குற்றவாளி ஒப்புக்கொணட்ார். சிறைத் தண்டனையுடன் அவருக்கு 1,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.
தீர்ப்பளிக்கும்போது மேலும் ஒன்பது குற்றச்சாட்டுகள் கருத்தில்கொள்ளப்பட்டன. குற்றவாளியின் மகளுக்குத் தற்போது 17 வயதாவதால் சிறுவர், இளம் வயதினர் சட்டத்தின்கீழ் அனைவரின் அடையாளத்தையும் வெளியிட அனுமதி இல்லை.