தென்கிழக்கு ஆசியாவின் ஆண்டிற்கான ஆக சிறந்த செயல்திறன்மிக்க நாணயம் என்பதை முடிவு செய்யும் முயற்சிகள் தொடங்கிவிட்டன. இதில் பல அம்சங்களும் சிங்கப்பூர் வெள்ளிக்கு அனுகூலமாக இருக்கின்றன.
அதற்குள்ளாக ஒரு முடிவுக்கு வர முடியாது என்றாலும் அந்த உயரிய நிலையை எட்டுவதற்கு வலுவான நிலையில் சிங்கப்பூர் வெள்ளி இருப்பதாகத் தெரிகிறது.
சிங்கப்பூர் நாணய ஆணையம் சென்ற வாரம் எடுத்த முடிவு காரணமாக சிங்கப்பூர் வெள்ளி ஆக அதிக செயல்திறன்மிக்க நாணயம் என்ற அந்தஸ்தைப் பெறுவதற்கு வலுவான போட்டிபோடும் நிலையில் இருக்கிறது.
கொவிட்-19 கிருமித்தொற்றை வெற்றிகரமான முறையில் சிங்கப்பூர் சமாளித்து இருப்பதும் சிங்கப்பூர் வெள்ளி உயரிய இடத்தைப் பெற மேலும் ஓர் அனுகூலமாக இருக்கும் வாய்ப்பும் உள்ளது.
சிங்கப்பூர் வெள்ளி சென்ற நவம்பரில் இருந்து ஏறத்தாழ 1.5% மதிப்பு கூடி இருக்கிறது.
விலைகளை நிலைப்படுத்துவதற்கான ஒரு கருவியாக அந்நியச் செலாவணியை சிங்கப்பூர் நாணய ஆணையம் பயன்படுத்துகிறது.
அதனுடைய அடுத்த கூட்டம் ஏப்ரலில் நடக்கிறது. நாணய மதிப்பு குறையாமல் இருக்கும் வகையில் மீண்டும் நாணயக் கொள்கையை ஆணையம் அக்கூட்டத்தில் இறுக்கும் பட்சத்தில் அதனால் ஏற்படக்கூடிய அனுகூலங்கள் மிக அதிக மாக இருக்கும் என்று தெரிகிறது.

