இயல்புநிலையை எதிர்பார்க்கும் பல்கலைக்கழக மாணவர்கள்

இயல்புநிலையை எதிர்பார்க்கும் பல்கலைக்கழக மாணவர்கள்

1 mins read
7073bcc8-73e4-4b5a-b0e0-e7d9a9151886
-

பல்­க­லைக்­க­ழ­கங்­கள் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்தி வருவதால் ­அவற்றில் பயி­லும் சூழல் மீண்­டும் இயல்­பு­நி­லைக்­குத் திரும்­பும் என்று மாண­வர்­கள் நம்­பிக்கை கொண்­டுள்­ள­னர்.

கடந்த ஜன­வரி மாதம் முதல் மாண­வர்­கள் நேர­டி­யா­கக் கலந்து­கொள்­ளக்­கூ­டிய நட­வ­டிக்­கை­களை மீண்­டும் பெரிய அள­வில் நடத்த முயற்­சி­கள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. புதி­தாக சேரும் மாண­வர்­க­ளுக்­கான அறி­முக நட­வ­டிக்­கை­கள், அரங்­கு­களில் நடை­பெ­றும் நிகழ்ச்­சி­கள் உள்ளிட்­டவை அவற்­றில் அடங்­கும்.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கம், சிங்­கப்­பூர் தொழில்­நுட்ப, வடி­வ­மைப்பு பல்­க­லைக்­க­ழ­கம் ஆகியவற்றில் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட மாண­வர்­கள் உள்­ளிட்­டோர் இனி வாரந்­தோ­றும் 'ஏஆர்டி' பரி­சோ­த­னை­களை மேற்­கொள்­ளத் தேவை­யில்லை.

முன்­ன­தாக மெய்­நி­க­ரில் நடை­பெற்ற பல்­வேறு நட­வ­டிக்­கை­களில் மீண்­டும் கூடு­த­லா­னோர் நேர­டி­யா­கப் பங்­கேற்க வகை­செய்­யும் வடி­வில் அவற்றை நடத்­தத் தாங்­கள் முயற்சி­களை எடுத்து வரு­வ­தாக சிங்­கப்­பூர் தொழில்­நுட்ப, வடி­வ­மைப்பு பல்­க­லைக்­க­ழ­கத்­தின் பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­கலைக்­க­ழ­கம், சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­கம் போன்­ற­வற்­றிலும் படிப்­ப­டி­யாக இயல்­பு­நி­லை­யைக் கொண்­டு­வர முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

பல்­க­லைக்­க­ழ­கத்­தில் தங்­கிப் பயி­லும் மாண­வர்­கள் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­னால் சுகா­தார அமைச்­சின் விதி­மு­றை­க­ளுக்­கேற்ப நடந்­து­கொள்­ள­வேண்­டும். இத்­த­கைய சில கட்­டுப்­பா­டு­களும் தொடர்ந்து கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கின்­றன.