24 ஆண்டுகளில் ஆகக் குறைவான ஆட்குறைப்பு

24 ஆண்டுகளில் ஆகக் குறைவான ஆட்குறைப்பு

2 mins read
8ab7c650-dfd1-420d-aae1-ea35144edfbb
-

சிங்­கப்­பூ­ரில் இந்த ஆண்­டின் முதல் காலாண்­டில் 1,300 பேர் ஆட்­கு­றைப்­புக்கு ஆளா­ன­தாக மனி­த­வள அமைச்­சின் முன்­னு­ரைப்பு தெரி­வித்­துள்­ளது.

பத்­தா­யி­ரம் ஊழி­யர்­களில் ஆறு பேர் வேலை இழந்­ததை இது குறிக்­கிறது.

ஒப்­பு­நோக்க சென்ற ஆண்­டின் நான்­காம் காலாண்­டில் இந்த எண்­ணிக்கை 1,500 ஆக இருந்­தது.

வேலைச் சந்­தை­யில் ஊழி­யர் பற்­றாக்­குறை நில­வும் நிலை­யில் 1998ஆம் ஆண்­டுக்­குப் பிறகு இந்த ஆண்­டின் முதல் காலாண்­டில்­தான் ஆகக் குறை­வான எண்­ணிக்­கை­யில் ஊழி­யர்­கள் ஆட்­கு­றைப்­புக்கு ஆளா­கி­யி­ருப்­ப­தாக மனி­த­வள அமைச்சு குறிப்­பிட்­டது.

மறு­சீ­ர­மைப்பு, மறு­வ­டி­வ­மைப்பு ஆகி­ய­வையே ஆட்­கு­றைப்­புக்­குக் கார­ணம் என்று மனி­த­வள அமைச்சு ஆய்வு செய்த பெரும்­பா­லான நிறு­வ­னங்­கள் குறிப்­பிட்­டன.

இந்த ஆண்­டின் முதல் காலாண்­டில் ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்­ட­வர்­களில் 700 பேர் சேவைத் துறை­யைச் சேர்ந்­த­வர்­கள். உற்­பத்­தித் துறை­யில் 500 பேரும் கட்­டு­மா­னத் துறை­யில் 100 பேரும் வேலை இழந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

ஒப்­பு­நோக்க 2020ஆம் ஆண்­டின் மூன்­றாம் காலாண்­டில் 9,000 பேர் ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்­ட­னர்.

கொவிட்-19 கிரு­மிப் பர­வல் உச்­சத்­தில் இருந்­த­தால் அப்­போது சிங்­கப்­பூ­ரின் சேவைத் துறை மிக­வும் பாதிக்­கப்­பட்­டது.

அதன் பிறகு தொடர்ந்து ஆறா­வது காலாண்­டாக சேவைத் துறை­யில் ஆட்­கு­றைப்­புக்கு ஆளா­னோர் எண்­ணிக்கை சரிந்து வரு­கிறது.

ஆனால் உற்­பத்தி, கட்­டு­மா­னம் ஆகிய துறை­களில் சென்ற ஆண்­டின் இறு­திக் காலாண்­டில் இருந்து இந்த எண்­ணிக்கை உயர்ந்­து­வ­ரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

சென்ற ஆண்­டின் இறு­திக் காலாண்­டில் உற்­பத்­தித் துறை­யில் 280 பேர் வேலை இழந்­த­னர். இம்­முறை இந்த எண்­ணிக்கை 500. கட்­டு­மா­னத் துறை­யில் 2021ன் நான்­காம் காலாண்­டில் 40 பேர் ஆட்­கு­றைப்­பால் பாதிக்­கப்­பட்­ட­னர். 2022ன் முதல் காலாண்­டில் இந்த எண்­ணிக்கை 100க்கு உயர்ந்­த­தாக அமைச்சு கூறி­யது.

இந்த ஆண்­டின் முதல் காலாண்­டுக்­கான வேலைச் சந்தை அறிக்கை ஜூன் மாத மத்­தி­யில் வெளி­யி­டப்­படும் என்று மனி­த­வள அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

அந்த அறிக்­கை­யில் ஆட்­கு­றைப்­பால் பாதிக்­கப்­பட்ட சிங்­கப்­பூர்­வா­சி­களில் மறு­வே­லை­வாய்ப்பு பெற்­ற­வர்­க­ளின் எண்­ணிக்கை உள்­ளிட்ட கூடு­தல் தக­வல்­கள் இடம்­பெற்­றி­ருக்­கும்.

மனிதவள அமைச்சு வேலைச் சந்தை முன்னுரைப்பை வெளியிட்டுள்ளது