தெம்பனிசில் கூடுதல் வீவக புளோக்குகளில சமூகத் தோட்டங்களும் 'வெர்ட்டிக்கல் ஃபார்ம்ஸ்' எனப்படும் அடுக்குப் பண்ணைகளும் இடம்பெறலாம்.
இந்த வட்டாரத்தில் உணவு தயாரிப்பதற்கான ஆற்றல் உள்ளிட்ட அம்சங்களை மேம்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் வேளையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய பண்ணைகளில் தயாரிக்கப்படும் உணவை வர்த்தக ரீதியாகவும் குடியிருப்பாளர்களுக்குக் குறைந்த விலையிலும் வழங்க வகைசெய்யும் கட்டமைப்பை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் தெரிவித்தார்.
"தற்போது பயன்படுத்தப்படாத பகுதிகளில் இந்தப் பண்ணைகள் அமைக்கப்படும். அதனால் அவ்விடங்களுக்கான விலை குறைவாக இருக்கும். அதே வேளையில், உணவை விநியோகிக்கவேண்டிய இடத்திலேயே இவை அமைந்துள்ளதால் விநியோகம் செய்யவேண்டியத் தேவையும் இருக்காது," என்று 'அவர் தெம்பனிஸ் ஹப்'பில் நடைபெற்ற 'தெம்பனிஸ் கோஸ் ஃபார்மிங்' எனும் 'விவசாயத்தில் இறங்கும் தெம்பனிஸ்' இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது திரு மசகோஸ் கூறினார்.

