ரேசர் நிறுவனத்தில் திருடப்பட்ட தரவுகள் யுஎஸ்$100,000க்கு விற்பனை

‘ரேசர்’ நிறுவனத்தின் கணினி கட்டமைப்புக்குள் நுழைந்த ஊடுருவல்காரன் அதன் முழுத் தரவுகளை திருடி விற்பனைக்கு வெளியிட்டுள்ளது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

இதனால் கணினி விளையாட்டு நிறுவனமான ‘ரேசர்’ கடும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது.

நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில் ஊடுருவல் பற்றி அறிந்திருப்பதாகவும் விசாரணை நடத்தி வருவதாகவும் ரேசர் தெரிவித்துள்ளது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இது பற்றி ஆராய்ந்ததில் ரேசர் இணையத்தளம், அதன் பொருள்களை வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் உள்ளே நுழையும் விவரங்கள், பின்னணியில் இயங்கும் மென்பொருள் இயங்குதளம் உட்பட விற்கப்படுவதை கண்டுபிடித்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ரேசரின் மின்னிலக்க ரொக்கப் பையும் திருடப்பட்டுள்ளது.

ஊடுருவல்காரன் திருடப்பட்ட தரவுகளில் சில மாதிரிகளை வெளியிட்டுள்ளான். அதில், சில வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதுபோன்ற 404,000 வாடிக்கையாளர்களின் விவரங்கள் தம்மிடம் இருப்பதாக அவன் தெரிவித்துள்ளான்.

ஊடுருவல் கருத்தரங்கு தளத்தில் மொத்த தரவுகளையும் ஒரே ஒரு வாடிக்கையாளருக்கு மட்டும் 100,000 யுஎஸ் டாலருக்கு விற்கப்படும் என்று அவன் அறிவித்துள்ளான். மேனிரோ மின்னிலக்க நாணயத்தின் மூலம் பணத்தை வழங்க வேண்டும் என்றும் அவன் கூறியுள்ளான்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!