ஈசூனில் மாது மாண்ட சம்பவம்: பொய்ச் செய்தி வெளியிட்ட செய்தித் தளங்களுக்கு பொஃப்மா திருத்த உத்தரவு

மாது ஒருவர் ஈசூனில் கட்டடம் ஒன்றிலிருந்து கீழே விழுந்து இறந்தது தொடர்பில் உயிரிழந்தவர் பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த இல்லப் பணிப்பெண் அல்லது ஊழியர் என்று மூன்று செய்தித் தளங்கள் போலியாகச் செய்தி வெளியிட்டுள்ளன.

‘கட்சி ஏஷியா’, ‘தி ஆன்லைன் சிட்டிசன் ஏஷியா’, ‘சிங்கப்பூர் ஆய்’ ஆகிய மூன்று செய்தித் தளங்களுக்கும் சிங்கப்பூர் இணையவழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (பொஃப்மா) திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மூன்று தரப்புகளும் தங்களின் இணையத்தளங்களில் திருத்தக் குறிப்பு ஒன்றை வெளியிடுவதுடன் அரசாங்கத்தின் தெளிவுக் குறிப்புக்கான இணைப்பையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மூன்று செய்தித் தளங்கள் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவுகளுக்கும் இந்தத் திருத்த உத்தரவு பொருந்தும்.

அரசாங்கத்தின் ‘ஃபெக்சுவலி’ இணையத்தளத்தின்படி, ஈசூன் ஸ்திரிட் 81ல் உள்ள புளோக் 874ல் உதவி கோரி சிங்கப்பூர் காவல் துறைக்கு அழைப்பு வந்ததாக அறியப்படுகிறது.

மருத்துவமனைக்குச் சுயநினைவின்றி கொண்டு செல்லப்பட்ட மாது, பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்த மாது ஒரு சிங்கப்பூரர் என்று மனிதவள அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!