விமானத்திலிருந்து தப்பித்த பூனை, பயணியிடம் கேத்தே பசிபிக் மன்னிப்பு

சாங்கி விமான நிலையத்தில் விமானத்தில் ஏற்றப்படும்போது ஒரு பூனை தப்பியோடியது.

விமான நிலையத்தில் ஐந்து நாள்களாக தேடப்பட்ட பிறகு இப்பூனை கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஹாங்காங்கின் கேத்தே பசிபிக் விமான நிறுவனம் பூனையின் உரிமையாளரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.

இச்சம்பவம் அக்டோபர் மாதம் 28ஆம் தேதியன்று நிகழ்ந்ததாக அய்க்கோ என்ற பெயர் சூட்டப்பட்ட இப்பூனையின் உரிமையாளரான ஏட்ரியன் வோங் எனும் ஆடவர் ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.

திரு வோங், தனது பூனை இல்லாமல் சிங்கப்பூரிலிருந்து ஹாங்காங்கிற்குப் பயணம் மேற்கொண்டார். பொதுமக்களிடமிருந்து உதவி நாட அவர் ‘லாஸ்ட் அண்ட் ஃபவுண்ட் பெட்ஸ்’ எனப்படும் காணாமற்போன செல்லப் பிராணிகளுக்கான ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

விமான நிலையத்தின் சரக்குகள் கையாளப்படும் பகுதியில் பூனை கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

எட்டு வயதாகும் அவரின் பூனை இம்மாதம் ஒன்றாம் தேதி காலை கண்டுபிடிக்கப்பட்டதாக அதே ஃபேஸ்புக் பக்கத்தில் திரு வோங் குறிப்பிட்டார். அவரின் இப்பதிவுக்கு 1,000க்கும் அதிகமானோர் ஃபேஸ்புக் உணர்வுகளை (ரியாக்‌ஷன்ஸ்) வெளியிட்டனர். உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் திரு வோங் தனது நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!