முதியவரின் வங்கிக் கணக்கிலிருந்து அனுமதியின்றி $88,600 எடுத்த பணிப்பெண்ணுக்குச் சிறை

தனது முதலாளியின் தந்தைக்குச் சொந்தமான வங்கிக் கணக்கிலிருந்து அனுமதியின்றி 89 முறை பணம் எடுத்த பணிப்பெண்ணுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளியான 32 வயது எகா யுனியார்சி அனுமதியின்றி மொத்தம் 88,600 வெள்ளியை எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. தனது தாய்நாடான இந்தோனீசியாவில் அவருக்கு அதிகக் கடன் இருந்ததால் அவர் அவ்வாறு செய்தார்.

இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையிலான காலத்தில் எகா அனுமதியின்றி பணத்தை எடுத்திருக்கிறார். இந்தோனீசியாவில் தனக்குக் கடன் கொடுத்தவர்களிடம் அப்பணத்தை அனுப்பியிருக்கிறார்.

முதியவர் இறந்த பிறகு எகா செய்த குற்றம் வெளிச்சத்துக்கு வந்தது. எகா பணத்தைத் திரும்பத் தரவில்லை.

அவர் பணத்தை வங்கிக் கணக்கிலிருந்து எடுத்தபோது முதியவருக்கு 95 வயது என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நம்பிக்கை துரோகம் இழைத்ததாகத் தன்மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டை எகா செவ்வாய்க்கிழமையன்று ஒப்புக்கொண்டார். அவருக்கு 15 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இழப்பீடாக 5,442 வெள்ளியைச் செலுத்துமாறும் எகாவுக்கு உத்தரவிடப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!