உற்பத்தித் துறை ஊழியர் மரணம்: பாதுகாப்பு விதிமுறை மீறல்

உற்பத்தித்துறை நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிந்தபோது ஊழியர் ஒருவர் இயந்திரத்தில் சிக்கித் தலை நசுங்கி உயிரிழந்தார். அவர் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றியிருந்தால் மரணத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று மரண விசாரணை நீதிமன்றம் கூறியது.

விசாரணை குறித்த விவரங்கள் இவ்வாரம் வெளியிடப்பட்டது. அரசாங்க மரண விசாரணை அதிகாரி அதம் நகோதா, சீன நாட்டவரான சன் சைதாவ் என்ற ஊழியரின் வேலையிட மரணத்தை எதிர்பாராத விபத்து என்று தீர்ப்பளித்தார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 11 அன்று, ஊழியர், காகித அட்டை தயாரிக்கும் இயந்திரத்தின் கழிவுகளை வெளியேற்றும்போது அதன் சன்னல் போன்ற இடைவெளிக்குள் மிகவும் நெருங்கிச் சென்றார். அந்த இயந்திரத்திற்குள் சிக்கி அவரது உடல் உள்ளே இழுக்கப்பட்டது. சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்தார்.

அந்த இயந்திரத்தை இயக்க அவருக்குப் ­பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. அவ்வியந்திரம், வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப, காகித அட்டைகளை வளைத்து, பசையால் இணைத்து, மடித்து, பெட்டிகளாக்கி அடுக்கும் திறன் படைத்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!