போலி ஓட்டுநர் உரிமங்களுடன் சூதாட்டக்கூடத்துக்குள் நுழைந்தவருக்குச் சிறை

இருவரின் வாகன ஓட்டுநர் உரிமங்களைப் பயன்படுத்தி சூதாட்டக் கூடங்களுக்குள் நுழைந்த தனியார் வாடகை வாகன ஓட்டுநருக்கு ஒன்பது வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் பயன்படுத்திய வாகன ஓட்டுநர் உரிமை அட்டைகளில் ஒன்று தனது வாடகை வாகனத்தில் பயணம் செய்தவருக்குச் சொந்தமானது. குற்றவாளி, அட்டைகளில் உள்ள தகவல்களை மாற்றித் தனது அடையாள விவரங்களைப் பதிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தகவல்கள் மாற்றப்பட்ட ஓட்டுநர் உரிமை அட்டைகளைப் பயன்படுத்தி குற்றவாளியான பாங் கிம் சுவான், மரினா பே சேண்ட்ஸ், ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா ஆகியவற்றில் இருக்கும் சூதாட்டக் கூடங்களுக்குள் பலமுறை நுழைந்திருக்கிறார்.

சூதாட்டப் பிரச்சினைக்கு ஆளான 56 வயது பாங், சிங்கப்பூரில் உள்ள சூதாட்டக் கூடங்களுக்குள் நுழையாமல் இருப்பதற்கான தடை உத்தரவைப் (செல்ஃப் எக்ஸ்குளு‌ஷன் ஆர்டர்) பெற்றிருந்தார். அதனால் அவர் சூதாட்டக் கூடங்களுக்குச் செல்ல முடியாதிருந்தது.

2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாங் கைது செய்யப்பட்டார். அவர் தகவல்கள் மாற்றப்பட்ட ஓட்டுநர் உரிமை அட்டைகளைப் பயன்படுத்தி மரினா பே சேண்ட்ஸ் சூதாட்டக் கூடத்துக்குள் நுழைய முயன்றதை பாதுகாவல் அதிகாரி ஒருவர் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து பாங் கைதானார்.

சூதாட்டக்கூட கட்டுப்பாட்டுச் சட்டம் உள்ளிட்டவற்றின்கீழ் தன்மீது சுமத்தப்பட்ட 17 குற்றச்சாட்டுகளை பாங் ஒப்புக்கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!