எகிப்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்த அல் சிசிக்கு அதிபர் தர்மன் வாழ்த்து

எகிப்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள அதிபர் அப்தெல் ஃபட்டா அல் சிசிக்கு அதிபர் தர்மன் சண்முகரத்னம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திரு அல் சிசி தொடர்ந்து மூன்றாவது முறையாக எகிப்தின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் 2030ஆம் ஆண்டு வரை எகிப்தை ஆட்சிபுரிவார்.

திங்கட்கிழமை எகிப்தில் தேர்தல் முடிவுகள் வெளியானது, அதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அதிபர் தர்மன் திரு அல்சிசிக்கு வாழ்த்துக் கடிதத்தை அனுப்பினார்.

“மத்திய கிழக்கு வட்டாரத்தில் தற்போது நடந்து வரும் பூசல் நேரத்தில் பெரிய அளவில் மக்கள் வாக்குகளை பெற்று எகிப்தில் ஆட்சி அமைத்தது மிக முக்கியமானது. காஸாவிற்குள் மனிதாபிமான உதவிகள் சென்றடையவும் அங்கு அமைதி நிலவவும் எகிப்தின் பங்கு இன்றியமையாத ஒன்று,” என்றார் திரு தர்மன்.

சிங்கப்பூரும் எகிப்தும் நீண்ட காலமாக அரசியல், பொருளியல், மக்கள் உறவு என நல்ல பங்காளித்துவ நாடுகளாக இருப்பதையும் திரு தர்மன் கடிதத்தில் குறிப்பிட்டார்.

சுற்றுப் பயணம், சிவில் விமானப் போக்குவரத்து ஆகிய துறைகளிலும் இரு நாடுகளுக்கு இடையே வளர்ந்துள்ள புரிந்துணர்வுகளையும் அதிபர் சுட்டிக்காட்டினார்.

திரு அல் சிசி 2014ஆம் ஆண்டு முதல்முறையாக எகிப்து அதிபராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் 2018ஆம் ஆண்டும் ஆட்சியைப் பிடித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!