வடகொரியாவுக்கு எண்ணெய் எரிவாயு ஏற்றுமதி: சிங்கப்பூரர்கள்மீது குற்றச்சாட்டு

வடகொரியாவுக்கு எண்ணெய் எரிவாயுவை (கேஸ் ஆய்ல்) ஏற்றுமதி செய்யப்பட்டதன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் இரு சிங்கப்பூரர்கள் மீது வியாழக்கிழமையன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

64 வயது குவெக் கீ செங் 17 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். ஐக்கிய நாட்டுச் சபை வடகொரியாவுக்கு எதிராக விதித்துள்ள தடை உத்தரவுகளை மீறி அந்நாட்டுக்கு ஏற்றுமதிக்கென வகைப்படுத்தப்பட்ட பொருளை அனுப்பியதன் தொடர்பிலான ஏழு குற்றச்சாட்டுகள் அவற்றில் அடங்கும்.

குவெக், நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அன்ஃபசார் டிரேடிங், ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட சுவான்சீஸ் போர்ட் செர்விசஸ் ஆகிய நிறுவனங்களின் இயக்குநராவார்.

மற்றொரு சந்தேக நபரான 54 வயது ஜஸ்டின் லோ எங் இயாவ், இதன் தொடர்பில் வடகொரியாவுக்கு எதிரான ஐக்கிய நாட்டுச் சபையின் விதிமுறைகளை மீறியதாக மொத்தம் ஒன்பது குற்றச்சாட்டுகளை எதிர்நநோக்குகிறார்.

ஐஎஸ்ஏ எனர்ஜி நிறுவனத்தின் வங்கிக் கணக்கின் முலம் எண்ணெய் எரிவாயுவை வாங்கியதாக நம்பப்படுகிறது. வடகொரியாவுக்கு எண்ணெய் எரிவாயுவை அனுப்ப ஒன்பது பரிவர்த்தனைகள் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

லோ, ஐஎஸ்ஏ எனர்ஜி நிறுவனத்தின் இயக்குநராவார். அந்நிறுவனமும் இந்த விவகாரத்தின் தொடர்பில் ஒன்பது குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!