ஜப்பான் நிலநடுக்கம்: பிரதமர் லீ அனுதாபம்

மோசமான நிலநடுக்கத்தை சந்தித்த ஜப்பானுக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தமது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

புத்தாண்டு தினத்தன்று 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஜப்பானின் நோட்டோ தீபகற்பத்தையும் அதன் சுற்று வட்டாரங்களையும் உலுக்கியது. குறைந்தது 84 பேர் மாண்டுவிட்டனர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பும் சேதமும் தமக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கி‌ஷிதாவுக்கு அனுப்பிய கடிதத்தில் திரு லீ வருத்தம் தெரிவித்தார். சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு அந்தக் கடிதத்தை வெளியிட்டுள்ளது.

“இந்தப் பேரிடரில் தங்களின் உறவினர்களை இழந்த குடும்பங்களுக்கு சிங்கப்பூர் அரசாங்கத்தின் சார்பில் நான் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார் பிரதமர் லீ. நிலநடுக்கத்தால் காயமடைந்தோர் விரைவில் குணமடைய தமது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.

“இந்த சவாலான காலகட்டத்தில் நீங்களும் ஜப்பானிய மக்களும் எங்கள் நினைவில் இருக்கிறீர்கள்,” என்று திரு லீ குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!