சிங்கப்பூர் தொழிலதிபர் மீது முதன்முதலாக நடவடிக்கை

உள்ளூர் அரசியலில் வெளிநாட்டுத் தலையீட்டைத் தடுக்கும் ஃபிக்கா சட்டம்

சிங்கப்பூரின் புதிய வெளிநாட்டினர் தலையீட்டு சட்டப்படி, தொழிலதிபரான ஃபிலிப் சான் மான் பிங், வயது 59, என்பவர் முக்கியமான அரசியல் சார்புடைய நபராக சிங்கப்பூர் அதிகாரிகள் அவரை அறிவிக்க உள்ளதாக அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் புதிய குடிமகனான திரு சான் மீது வெளிநாட்டவர் செல்வாக்கு செலுத்தும் சாத்தியம் உள்ளதாக அரசாங்கம் மதிப்பீடு செய்துள்ளது. அதனால், இவர் வெளிநாட்டினர் நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்கு தயாராக உள்ளவர் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை (பிப்ரவரி 2) அன்று உள்துறை அமைச்சு தெரிவித்தது.

இதன்மூலம், ஹாங்காங் தொழிலதிபரான ஃபிலிப் சான் ‘ஃபிக்கா’ எனப்படும் வெளிநாட்டு தலையீடு (எதிர் நடவடிக்கைகள்) சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட முதல் நபர் ஆகிறார்.

அந்தச் சட்டம் உள்ளூர் அரசியலில் வெளிநாட்டவர் தலையீட்டை தடுக்கும் நோக்கம் கொண்டது.

இதன் தொடர்பில் உள்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், திரு சானின் நடவடிக்கைகள் சிங்கப்பூர் அரசியலை ஒரு குறிப்பிட்ட முடிவை நோாக்கிச் செல்லும் எண்ணம் கொண்டது என்று விளக்கியது. அதனால், பொதுமக்கள் நலன் கருதி அவருக்கு எதிராக இந்தச் சட்டத்தின்கீழ் எதிர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் ரீதியாக அவர் ஒரு முக்கியமான நபர் என்று குறிப்பிடப்படுவதால், அவர் ஆண்டுதோறும் $10,000க்கு மேலான, அவர் ஏற்கும், பெறும் அரசியல் நன்கொடைகளை அரசாங்கத்திடம் தெரிவிக்க வேண்டும். அத்துடன், அவரது வெளிநாட்டு தொடர்புகள், அவர் பெறும் குடியேற்ற அனுகூலங்கள் ஆகியவற்றையும் அவர் ஆண்டுதோறும் தெரிவிக்க வேண்டும்.

திரு சான் பல நிலச் சொத்து முதலீட்டு நிறுவனங்களில் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவர் வெளிநாட்டுவாழ் சீனப் பிரதிநிதி என்ற அடைமொழியுடன் கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் சீனாவில் ஆண்டுதோறும் நடைபெறும் நாடாளுமன்றத்தின் இரு கூட்டங்களுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இவர், சீன அரசு ஆலோசனை மன்றத்தின்கீழ் செயல்படும் சீன மக்கள் அரசியல் கலந்தாலோசனை மாநாடு என்ற அமைப்பால் உலகெங்கிலும் உள்ள 30 பிரதிநிதிகளில் ஒருவராக அழைக்கப்பட்டிருந்தார்.

திரு சான் உள்பட இந்தப் பிரதிநிதிகள், விசா கட்டுப்பாடுகளை தளர்த்துவது போன்ற பிரச்சினைகள் தொடர்பாக சீன அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்ததுடன் சீன மக்கள் அரசியல் கலந்தாலோசனை மாநாட்டு அமைப்பின் தலைமைச் செயலாளருடன் சந்திப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்றார் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஃபிக்கா எனப்படும் வெளிநாட்டு தலையீடு (எதிர் நடவடிக்கைகள்) சட்டம், பத்து மணிநேர விவாதத்துக்குப் பின் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சட்டமானது.

உள்ளூர் அரசியலில், எதிர்ப்புணர்வை தூண்டும் தகவல் இயக்கங்கள், அல்லது உள்ளூர் நபர்களைப் பயன்படுத்தும் மூலமாகவே வெளிநாட்டினர் தலையீட்டை, தடுக்கும் நோக்கத்துடன் ஃபிக்கா சட்டம் இயற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!