சாங்கி பாயிண்ட் படகு முனையத்தில் ஆடவர் சடலம்

சாங்கி பாயிண்ட் படகு முனையத்தில் 57 வயது ஆடவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. சடலம் பிப்ரவரி 10ஆம் தேதி கடல் நீரில் இருந்து மீட்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிப்ரவரி 9ஆம் தேதி மாலை 4:15 மணிவாக்கில் படகு முனையத்தின் கடற்கரையில் ஆடவர் ஒருவர் காணவில்லை என்று காவல் துறைக்கு தகவல் வந்ததாக அதிகாரிகள் கூறினர்.

அதன் பின்னர் அங்கு வந்த மீட்புப்படையினர் 24 மணி நேரத்திற்கு மேல் நடந்த தேடுதலுக்குப் பிறகு ஆடவரின் சடலத்தை மீட்டனர்.

ஆடவரைத் தேட சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையத்தின் சுற்றுக்காவல் படகும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மீட்புக் கப்பலும் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

ஆடவரின் மரணத்தில் எந்தவித சூதும் இல்லை என்று காவல்துறை தெரிவித்தது. மீட்பு பணிகள் தொடர்பான படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின.

51 லோரோங் பேக்குகாங்கில் உள்ளது சாங்கி பாயிண்ட் படகு முனையம். அங்கிருந்துதான் புலாவ் உபின் தீவுக்கு படகுகள் செல்லும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!