படகிலிருந்து விழுந்த ஒருவரைக் காணவில்லை; நால்வர் தப்பினர்

புலாவ் ஹந்து தீவுக்கு அருகே படகிலிருந்து ஒருவர் விழுந்துவிட்டார்.

அவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மார்ச் 2ஆம் தேதி பிற்பகல் 1.30 மணியளவில் புலாவ் ஹந்துவுக்கு அருகே இரு உல்லாசப் படகுகள் மோதிக் கொண்டதாக தமக்கு தகவல் கிடைத்தது என்று சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்தது.

ஐந்து பயணிகள் படகிலிருந்து விழுந்துவிட்டனர். நான்கு பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ஆனால், ஒருவரைக் காணவில்லை என்று ஆணையம் நேற்று மாலை (மார்ச் 2) கூறியது.

அந்த வட்டாரம் முழுவதும் சுற்றுக்காவல் படகுகளை ஆணையம் அனுப்பித் தேடி வருகிறது. கடற்கரைக் காவற்படை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றின் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தண்ணீரில் யாராவது இருக்கிறார்களா என்பதைக் கவனிக்கும்படி அப்பகுதியில் உள்ள படகுகள் மற்றும் கப்பல்களுக்குத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!