மருத்துவர் தமக்கு இருமல் மருந்து பரிந்துரைக்க மறுத்ததைத் தொடர்ந்து, 34 வயது ஆடவர் ஒருவர் போலி $1,000 நோட்டைக் கொண்டு 2022ல் இணைய விற்பனையாளரிடம் இருந்து அதைச் சட்டவிரோதமாக வாங்கினார்.
உட்லண்ட்சில் உள்ள டிபிஎஸ் வங்கிக் கிளையில், ஆறு போலி $1,000 நோட்டுகளைக் கொடுத்து வெளிநாட்டு நாணயத்தைப் பெற காலித் அப்துல்லா முற்பட்டார்.
ஆனால் காவல்துறையால் கைது செய்யப்பட்ட அவரிடம் கிட்டத்தட்ட $18,500 மதிப்பிலான போலி நோட்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது. ஷாப்பி இணையத் தளத்தில் அவற்றை வாங்கியதாக அவர் ஒப்புக்கொண்டார்.
காலித்துக்கு ஏப்ரல் 2ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.