மூன்று வாகன விபத்து; தலைகீழான கார், ஒருவர் மருத்துவமனையில்

உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதையடுத்து ஆடவர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இச்சம்பவம் உட்லண்ட்ஸ் அவென்யு 1-அவென்யு 2 சந்திப்பில் வெள்ளிக்கிழமை (மார்ச் 15) நிகழ்ந்தது. நண்பகல் 12 மணிக்குத் தங்களுக்குத் தகவல் வந்ததென காவல்துறையினர் தெரிவித்தனர்.

24 வயது பயணி ஒருவர் நினைவுடன் இருந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் காவல்துறை கூறியது. அந்த ஆடவர் கூ தெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செலல்ப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

லேசான காயங்கள் ஏற்பட்ட வேறு இருவர் சோதிக்கப்பட்டதாகவும் குடிமைத் தற்காப்பப் படை சொன்னது. அவ்விருவரும் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!