‘மிஸ்டர் பீன்’ பானத்தை ருசித்துக் கொண்டிருந்த ஒரு பெண் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். அந்தப் பானத்தில் கரப்பான்பூச்சி இருந்ததே அதற்கு காரணம்.
தமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பேம்ஸ்டார் டான், ‘கம்ப்ளயிண்ட் சிங்கப்பூர்’ என்ற ஃபேஸ்புக் குழுவில் அவர் பகிர்ந்தார்.
“நான் பானத்திலிருந்த ஏதோ ஒன்றை உறிஞ்சிவிட்டேன். அது மொறுமொறுவென இருந்தது. உடனே துப்பிவிட்டேன். அதைப் பார்த்ததும் பயங்கரமாக இருந்தது. அது ஒரு கரப்பான்பூச்சி,” என்று தனது வலைப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
அவர் வெளியிட்டிருந்தப் படத்தில் பிளாஸ்டிக் கப் மேலுறை மீது ஒரு கரப்பான்பூச்சி தென்பட்டது.
இது குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் விளக்கம் கேட்டதற்கு வாடிக்கையாளருடன் தொடர்புகொண்டு அவரது நலத்தை உறுதி செய்ததாக ‘மிஸ்டர் பீன்’ வர்த்தகச் சின்னத்தின் உதவி இயக்குநர் தெரிவித்தார்.
இதற்கிடையே பானம் வழங்கப்பட்ட கடையில் கரப்பான்பூச்சி இல்லை என்பதை உறுதி செய்ய ‘மிஸ்டர் பீன்’ நிர்வாகம் சோதனை மேற்கொண்டது. பூச்சி மருந்து நிறுவனம் சோதனையிட்ட போதும் அங்கு கரப்பான்பூச்சி எதுவும் கிடைக்கவில்லை. ‘மிஸ்டர் பீன்’ நிறுவனத்துக்கு சிங்கப்பூரில் 70 கடைகள் இருக்கின்றன.
இந்த நிலையில் உணவுப் பாதுகாப்பை கடுமையாகக் கருதுவதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது. பாதுகாப்பற்ற உணவு குறித்து வரும் புகார்கள் அனைத்தையும் விசாரிப்பதாகவும் அது சொன்னது.
‘மிஸ்டர் பீன்’ கரப்பான்பூச்சி விவகாரத்தையும் கவனித்து வருவதாக நிலையம் குறிப்பிட்டது.