பெருமை சேர்க்கும் பதவிப் பெயர்களால் நிறுவனங்களுக்கு அபாயம்: வல்லுநர்கள்

நிறுவனங்களில் ஊழியர்களுக்குப் பெருமைசேர்க்கும் பதவிப் பெயர்களை வழங்கும் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்துவருகிறது.

சென்ற ஆண்டு ‘லிங்க்ட்இன்’ தளத்தில் வெளியான, ஈராண்டு அல்லது அதற்குக் குறைவான கால வேலை அனுபவம் உள்ளோருக்கான வேலைகளுக்கு ‘மேலாளர்’ அல்லது ‘இயக்குநர்’ என்ற பதவிப் பெயர் 24 விழுக்காடு அதிகமாகக் காணப்பட்டது.

புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனங்களிலும் சிறிய நிறுவனங்களிலும் பெருமைசேர்க்கும் பதவிப் பெயர்கள் வழக்கமாகக் காணப்படுகின்றன என்கின்றனர் வல்லுநர்கள். குறிப்பாக, தெளிவான ஊழியர் படிநிலைகளைக் கொண்டிராத நிறுவனங்களில் இத்தகைய போக்கு காணப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

திறனாளர்கள், மிகக் குறுகிய காலத்தில் உயர்ந்த பதவிப்பெயர் கொண்ட பொறுப்புகளை ஏற்பதை இப்போக்கு சாத்தியமாக்குகிறது.

வெளித்தரப்புகளுடன் தொடர்புகொள்ளும் ஊழியர்களுக்குப் பெருமை சேர்க்கும் விதமாகவும் திறனாளர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் இவ்வாறு பதவிப் பெயர்கள் நிர்ணயிக்கப்படுவதாக மனிதவளத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், பெருமைசேர்க்கும் பதவிப் பெயர்களால் நிறுவனத்திற்குள் சமநிலையற்ற தன்மை ஏற்படக்கூடும். ஒரு பதவிக்குத் தேவையான திறன்களோ அனுபவமோ இல்லாதோரும் அதற்குத் தயார் என்ற தவறான சித்திரிப்பை அது உருவாக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!