அதிக வருகையாளர்களை ஈர்த்த பொங்கோல் வட்டார நூலகம்

உடற்குறையுள்ளோர் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட சிங்கப்பூரின் முதல் பொது நூலகமாக பொங்கோல் வட்டார நூலகம் திகழ்கிறது.

இந்த நூலகம் தனது முதல் ஆண்டு நிறைவு விழாவை இவ்வாண்டு ஏப்ரல் 6ஆம் தேதி கொண்டாடியது.

சன்கேர் எஸ்ஜி தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்களின் விளையாட்டுகளும் கைவினை நிகழ்ச்சிகளும் ஆண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இடம்பெற்றன.

2023ஆம் ஆண்டில் 1.3 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்த பொது நூலகமாக பொங்கோல் வட்டார நூலகம் திகழ்கிறது என அந்நூலகத்தின் துணை இயக்குநர் வெரீனா லீ கூறினார்.

கடந்த ஆண்டுத் தொண்டூழியர்கள் உட்பட சமூக பங்காளித்துவங்கள் இந்த நூலகத்தின் வளர்ச்சிக்கு அதிக பங்காற்றி இருப்பதாகவும் திருவாட்டி லீ தெரிவித்தார்.

“எங்கள் தொண்டூழியர்களில் சிலர் உடற்குறையுள்ளோர்க்கு உதவுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் பொங்கோல் கதைகள் கண்காட்சியில் பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு உதவும் வகையில் தொட்டுணரக்கூடிய வடிவங்களை உருவாக்க முயன்றார்,” என்று தொண்டூழியர்களின் சேவைக்கு அவர் புகழாரம் சூட்டினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!