சிங்கப்பூரில் பொழுதுபோக்காக மீன்பிடித்தலில் ஈடுபடும் தூண்டில்காரர்கள் சிலர், அண்மையில் நிகழ்ந்த எண்ணெய்க் கசிவுச் சம்பவத்தை அடுத்து மீன்பிடி குளங்களை நாடுவதாகக் கூறியுள்ளனர்.
கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக பிடோக் ஜெட்டியில் மீன்பிடித்தலில் ஈடுபட்ட டெர்ரிக் டான், 47, தற்போது பாசிர் ரிஸ் பகுதியில் உள்ள டி’பெஸ்ட் ரெக்ரியேஷன் எனும் உப்பு நீர் மீன்பிடி குளத்திற்குச் செல்வதாகக் கூறினார்.
எண்ணெய்க் கசிவை அடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் விளையாட்டு நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டதைச் சுட்டிய அவர் பிள்ளைகளுடன் இந்த மீன்பிடி குளத்திற்குச் செல்ல முடிவெடுத்ததாகக் கூறினார்.
வழக்கமாக இந்த மீன்பிடி குளத்திற்கு பள்ளி விடுமுறைக் காலகட்டங்களில் அன்றாடம் 100 முதல் 120 வாடிக்கையாளர்கள் வருவர் என்று கூறிய அதன் பொது மேலாளர், ஜூன் 17 முதல் 21ஆம் தேதி வரை அந்த எண்ணிக்கை 190 முதல் 225 வரை அதிகரித்ததாகக் கூறினார்.
பிடோக் ஜெட்டியில் கடந்த 10 ஆண்டுகளாக வாரம் இருமுறை மீன்பிடித்தலில் ஈடுபட்டதாகக் கூறும் ஹென்றி ஹோ, 47, தற்காலிமாக இந்த மீன்பிடி குளத்திற்கு மீன்பிடிக்கச் செல்வதாகக் கூறினார்.
பாசிர் ரிஸ் வட்டாரத்தில் 1989ஆம் ஆண்டு முதல் இருக்கும் உள்ள இந்த உப்பு நீர் மீன்பிடி குளத்தை 2014ஆம் ஆண்டு முதல் டி’பெஸ்ட் ரெக்ரியேஷன் நிறுவனம் நிர்வகித்து வருகிறது.
சிங்கப்பூரின் மற்ற மீன்பிடி குளங்கள் கடந்த வாரம் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறின.