டான் டோக் செங் மருத்துவமனைக்குப் புதிய தலைமை நிர்வாக அதிகாரி

சிங்கப்பூர் ஆயுதப் படை மருத்துவப் பிரிவின் முன்னாள் தலைவர் டாக்டர் டாங் கொங் சூங், ஏப்ரல் 1ஆம் தேதி டான் டோக் செங் மருத்துவமனையின் புதிய தலைமை நிர்வாகியாகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

டாக்டர் டாங், 2015ஆம் ஆண்டுமுதல் அந்தப் பதவியில் இருக்கும் பேராசிரியர் யூஜீன் ஃபிடெலிஸ் சோவிடம் இருந்து அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

டாக்டர் டாங் 2020ஆம் ஆண்டு டான் டோக் செங் மருத்துவமனையில் சேர்ந்து, மயக்கவியல், தீவிர பராமரிப்பு, வலி மருந்துப் பிரிவில் மூத்த ஆலோசகராகப் பணியாற்றினார்.

டான் டோக் செங் மருத்துவமனையின் தீவிர பராமரிப்புப் பிரிவின் தலைமையகத்தை நிறுவுதல், அவசரச் சூழ்நிலையில் திட்டமிடுதல், கொவிட்-19 கிருமிப்பரவலின்போது செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றியதாக அறிக்கை கூறியது.

2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து, அவர் மருத்துவமனையின் உதவித் தலைமை நிர்வாகியாகச் செயல்பட்டார். அதனைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் துணைத் தலைமை நிர்வாகியானார்.

இந்நிலையில், பேராசிரியர் சோ, ஏப்ரல் 1ஆம் தேதி தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தில், மக்கள்தொகை சுகாதாரப் பிரிவின் குழுமத் தலைமை நிர்வாகியாகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!