தாம்சன்-ஈஸ்ட்கோஸ்ட் பாதையில் வியாழக்கிழமை (ஜனவரி 2) மாலை பெருவிரைவு ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டது.
ரயில் கோளாறு காரணமாக சேவையில் இடையூறு ஏற்பட்டது. இதே காரணத்தால் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் ஏழு நாள்களில் மூன்றாவது முறையாக சேவையில் இடையூறு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேல்டிகாட், கார்டன்ஸ் பை தி பே நிலையங்களுக்கிடையே பயண நேரம் 10 நிமிடங்கள் அதிகரிக்கலாம் என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் வியாழக்கிழமை இரவு 7.38 மணிக்கு ஃபேஸ்புக்கில் தகவல் வெளியிட்டது.
சேவை இடையூறு மேலும் சில ரயில் நிலையங்களைப் பாதித்ததாக எஸ்எம்ஆர்டி சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு தெரிவித்தது. கேல்டிகாட்டிலிருந்து பேஷோர் நிலையம் வரை இடையூறு ஏற்பட்டதாக எஸ்எம்ஆர்டி குறிப்பிட்டது.
நிலைமை சரிசெய்யப்பட்டதாக அந்நிறுவனம் இரவு 8 மணிக்குப் பதிவிட்டது. 2024 டிசம்பர் 27, 29ஆம் தேதிகளிலும் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் ரயில் கோளாறு ஏற்பட்டது.