கூட்டுரிமை வீட்டு பாதுகாவல் அதிகாரி மீது தாக்குதல்

கிச்சனர் ரோட்டில் உள்ள ‘சிட்டி ஸ்குவேர் ரெசிடென்சஸ்’ கூட்டுரிமை வீட்டில் காலை 6.30 மணியளவில் பணியில் ஈடுபட்டிருந்தார் பாதுகாவல் அதிகாரி சுரேஷ்குமார்.  

அப்போது அவரைச் சிலர் அடித்து, உதைத்தது கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளதாக சிங்கப்பூர் பாதுகாவலர் சங்கம்  கூறியது.

தாக்குதலில் எத்தனை பேர் ஈடுபட்டனர் என்பது குறித்துத் தெளிவான தகவல் இல்லை. சங்கம் அனுப்பிய காணொளியில், கூட்டுரிமை வீட்டின் வாகன நுழைவாயிலுக்கு அருகே இரு ஆடவர்கள் சுரேஷ்குமாரை நோக்கிக் கையை வீசித் தாக்கியதைக் காணமுடிகிறது. 

சம்பவம் குறித்துக் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாக சங்கம் கூறியது. பாதுகாவல் ஊழியர் சங்கத்துக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

சுரேஷ்குமார் பணிபுரியும் நிறுவனம் பாதுகாவல் அதிகாரிகள் எவ்வித அச்சமும் இன்றித் தங்கள் கடமையை ஆற்றுவதை உறுதிசெய்வதில் கடப்பாடு கொண்டிருப்பதாகக் கூறியது. சட்டம், அமலாக்கம் போன்றவற்றுக்கு அப்பால் மக்களின் மனப்போக்கில் மாற்றம் தேவை என்று அது குறிப்பிட்டது.

பாதுகாவல் அதிகாரிகள் உள்ளிட்ட முன்னிலை ஊழியர்களைச்   சொல்லாலோ, செயலாலோ துன்புறுத்துவதை அறவே பொறுத்துக்கொள்ள இயலாது என்று கூட்டுரிமை வீட்டின் நிர்வாகம்  கூறியது.

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!