தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆகஸ்ட் 30 முதல் வனவிலங்கு வர்த்தகக் குற்றங்கள் கடுமையான குற்றங்களாகக் கருதப்படும்

2 mins read
d03fe94b-fe26-4fb6-b67a-4ddac052e599
சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தில் இருந்து மீட்கப்பட்ட புளூ ட்ரீ ஓணான், இப்போது சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தின் ஊர்வனப் பிரிவில் உள்ளது. - படம்: மண்டாய் வனவிலங்குக் குழுமம்

வனவிலங்கு வர்த்தகம் மற்றும் ஃபிளையிங் ஃபாக்சஸ் (flying foxes) எனும் வௌவால் போன்ற அரிய உயிரினங்களை வைத்திருப்பது சிங்கப்பூரில் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச் சட்டத்தின் கீழ் கடுமையான குற்றங்களாகக் கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று உள்துறை அமைச்சு ஆகஸ்ட் 29ஆம் தேதி ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

இச்சட்டம், பொதுப் பாதுகாப்பு, இடர்காப்பு, கடுமையான அச்சுறுத்தலாக மதிப்பிடப்பட்ட குற்றங்கள், ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையவை. அவற்றில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களும் உரிமமின்றி கடன் வழங்குதல் ஆகியவையும் அடங்கும்.

வனவிலங்கு வர்த்தகக் குற்றங்களை இந்தச் சட்டத்தின் கீழ் சேர்க்கும் முடிவு, சிங்கப்பூரில் வனவிலங்கு வர்த்தகத்தில் இருந்து ஒருங்கிணைக்கப்பட்ட குற்றக் கும்பல்களைத் தடுப்பதற்கான ஒரு செயலுக்குமான நடவடிக்கையாகும் என்று உள்துறை அமைச்சு விளக்கியது.

“அனைத்துலக வனவிலங்கு கடத்தல் செயல் ஓர் அதிநவீன எல்லை தாண்டிய விநியோகச் சங்கிலி மூலம் செயல்படுகிறது. சிங்கப்பூரில் உள்ள ஒருங்கிணைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் இந்த வர்த்தகத்தில் ஈடுபடும் அபாயம் உள்ளது,” என்றும் அமைச்சு விவரித்தது.

தேசிய பூங்காக் கழகத்தால் புலனாய்வு செய்யப்பட்ட வனவிலங்கு வர்த்தகக் குற்றங்களின் கடந்தகால வழக்குகள், சிங்கப்பூரில் உள்ள ஒருங்கிணைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்பைக் கண்டறியவில்லை என்றாலும், அது எதிர்காலத்தில் அத்தகைய சாத்தியத்தை நிராகரிக்கவில்லை என்று அமைச்சு கூறியது.

வனவிலங்கு வர்த்தகக் குற்றங்களை ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச் சட்டத்தின் கீழ் சேர்க்கும் முடிவு தேசிய வளர்ச்சி அமைச்சுடன் கலந்தாலோசித்து எடுக்கப்பட்டது என்று உள்துறை அமைச்சு மேலும் தெரிவித்தது.

அழிந்து வரும் விலங்கினங்கள் (இறக்குமதி, ஏற்றுமதி) சட்டத்தின் கீழ், அனுமதியின்றி அரிய உயிரினங்களின் இறக்குமதி, ஏற்றுமதியில் ஈடுபடுவது ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச் சட்டத்தின் கீழ் கடுமையான குற்றமாகக் கருதப்படும்.

சிறுத்தை பூனை (leopard cat), துகோங் (dugong,) சுண்டா எறும்புதின்னி (Sunda pangolin), ஃபிளையிங் ஃபாக்சஸ் (flying foxes) எனும் வௌவால் வகை முதலியவை அரிய விலங்கினங்களி்ல் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்