துப்புரவுப் பணியில் ஈடுபடும் பெரும்பாலான ஊழியர்கள் தங்களின் எதிர்காலக் கனவுகள் அனைத்தையும் தங்கள் பிள்ளைகள் மேல் வைத்துள்ளதில் ஆச்சரியமில்லை. "எனது பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் எங்களைப்போல் அல்லாமல் மற்ற வேலைவாய்ப்பு
களைப் பெறும் வகையில் படிப்பறிவு பெறவேண்டும். அதுவே எனது ஆசை," என்று சொல்கிறார் திரு முனிசாமி என்பவர். இவரின் பேத்தியான சந்தனா, 17, வழக்கறிஞராக வர ஆசைப்படுகிறார்.
"எங்களைப் பட்டப்பெயரால் அழைத்து, இழிவுபடுத்தி, எங்களைக் கடந்து சென்றால் மூக்கைப் பொத்திக்ெகாண்டு, எங்களை மனிதர்களாக மதிக்காதோரை வெட்கித் தலைகுனிய வைக்க வேண்டும்," என்று உரக்கச் சொல்கிறார் அந்த இளம்பெண்.
"மலத்தை அள்ளப் பயன்படுத்திக்கொண்ட சமூகம் எனது தாத்தா முன்னேற எந்த வாய்ப்பையும் அளிக்கவில்லை. அழுக்காக இருப் பதால் தீண்டத்தகாதவர்களாக எங் களை நடத்துகிறார்கள். எல்லா மனிதர்களின் உடலிலும் ஒரே நிற ரத்தம்தான் ஓடுகிறது. ஒரே மாதிரிதான் உணவு உண்கிறோம். சாதிப் பெயரைச் சொல்லி எங்களை ஒதுக்கி வைக்காமல் மனிதப் பண்புகளை மதிக்கும் நிலை ஏற்பட வேண்டும்," என்கிறார் சந்தனா.
2018ஆம் ஆண்டு 14 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வின்படி கழிவுகளை சுத்தம் செய்யும் பணிகளில் 87,913 பேர் ஈடுபட்டனர்.