பேங்காக்: திங்கட்கிழமை (டிசம்பர் 15) அன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் உருட்டுப்பந்து இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் வீராங்கனை சார்மெய்ன் சாங் தங்கம் வென்றார்.
ப்ளூ-ஓ ரிதம் & பவுல் ராட்சாயோதின் அரங்கில், சாங் மலேசியாவின் நடாஷா ரோஸ்லானை இறுதிப் போட்டியில் 234-191 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்தார்.
அரையிறுதிப் போட்டியில் தோல்வி கண்ட மற்றொரு சிங்கப்பூரரான கொலின் பீயும் இந்தோனீசியாவின் ஷாரன் லிமான்சந்தோசோவும் வெண்கலப் பதக்கத்தைப் பகிர்ந்துகொண்டனர்.

