கமல்ஹாசனின் வர்ணனையில் தமிழர் வரலாறு; மலைப்பில் உலகம்(காணொளி)

கமல்ஹாசனின் வர்ணனையில் தமிழர் வரலாறு; மலைப்பில் உலகம்(காணொளி)

1 mins read

கமல்ஹாசனின் வர்ணனையில் தமிழர் வரலாறு குறித்த முப்பரிமாண நிகழ்ச்சி நேற்று தமிழகத்தில் நடைபெற்ற அனைத்துலக சதுரங்க ஒலிம்பியாட் தொடக்க விழாவில் இடம்பெற்றது.

மிகவும் பிரமாண்ட முறையில் நடந்தேறிய இந்த நிகழ்ச்சி தமிழரின் கலை, வாழ்வியல், சாதனைகள், சோழர் பரம்பரையின் பெருமைகளை எடுத்துரைத்தது.

Watch on YouTube

இது உலக மக்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

அனைத்­து­லக சது­ரங்க ஒலிம்­பி­யாட் போட்­டியை பிர­த­மர் மோடி நேற்று தொடங்கி வைத்­தார்.

முழு நிகழ்ச்சியையு இந்த இணைப்பில் காணலாம்

தொடக்க விழா­வில் பல்­வேறு நாடு­க­ளின் அணித் தலை­வர்­கள் கொடி­யு­டன் அணி­வ­குப்பு நடத்­தி­னர். நடி­கர்­கள் ரஜி­னி­காந்த், கார்த்தி, கவி­ஞர் வைர­முத்து உள்­ளிட்ட பல முக்­கிய பிர­மு­கர்­கள் இந்த நிகழ்ச்­சிக்கு வந்­தி­ருந்­த­னர். இம்­முறை சது­ரங்க ஒலிம்­பி­யாட்­டில் பங்­கேற்க 187 நாடு­களில் இருந்து 2,000க்கும் மேற்­பட்ட சதுரங்க வீரர்­கள், வீராங்­க­னை­கள் மாமல்­ல­பு­ரத்­தில் முகா­மிட்­டுள்­ள­னர்.

கலை நிகழ்ச்­சி­களில் பங்­கேற்ற இளம் இசைக்­க­லை­ஞர் லிடி­யன் நாதஸ்­வ­ரம் கண்­ணைக் கட்­டிக்­கொண்டு பியானோ வாசித்து அனை­வ­ரை­யும் வியப்­பில் ஆழ்த்­தி­னார். வர­வேற்­பு­ரைக்­குப் பிறகு நடி­கர் கமல்ஹாச­னின் குர­லில் தமிழ் வர­லாறு குறித்த முப்­ப­ரி­மாண நிகழ்ச்சி அரங்­கே­றி­யது. இசை­ய­மைப்­பா­ளர் ஏ.ஆர்.ரஹ்­மான் இசை­ய­மைத்த பாட­லும் ஒலிக்­கப்­பட்­டது.