ஐந்து ஆண்டுகளில் 944 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு

ஐந்து ஆண்டுகளில் 944 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு

1 mins read
331dc3ca-8dd3-4672-906b-7571b07c69e6
மீட்​கப்​பட்டவர்களுக்கு உடனடி நிவாரணத் தொகை​யாக ரூ.2.56 கோடி வழங்​கப்​பட்​டதாக அமைச்சர் சி.வி.கணேசன் குறிப்பிட்டார். - படம்: காஷ்மீரி டைம்ஸ்

சென்னை: தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 944 கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர்,

மீட்​கப்​பட்டவர்களுக்கு உடனடி நிவாரணத் தொகை​யாக ரூ.2.56 கோடி வழங்​கப்​பட்​டதாக குறிப்பிட்டார்.

கொத்தடிமைத் தொழிலா​ளர் முறையை முற்​றி​லும் ஒழிக்​க​வும் தமிழகத்தை கொத்​தடிமைத் தொழிலா​ளர் இல்​லாத மாநில​மாக உரு​வாக்​க​வும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

2030ஆம் ஆண்​டுக்​குள் தமிழகத்தை கொத்​தடிமைத் தொழிலா​ளர் இல்​லாத மாநில​மாக உரு​வாக்க வேண்​டும் என்பதே தமிழக அரசின் இலக்கு என்றும் இந்த நோக்​கத்தை நிறைவேற்றும் வகை​யில் அனை​வரும் பாடுபட வேண்​டும் என்றும் அமைச்சர் சிவி கணேசன் கேட்டுக்கொண்டார்.

மீட்​கப்​பட்ட கொத்​தடிமைத் தொழிலா​ளர்​களின் வாழ்​வா​தா​ரத்தை உறு​திப்​படுத்​தும் நோக்​கில், பல்​வேறு துறை​களின் வாயி​லாக நலத்​திட்ட உதவி​களும் வழங்​கப்​பட்டு வருவதாகவும் அவர்​களின் மறு​வாழ்​வுக்​கான நடவடிக்​கைகளும் எடுக்​கப்​பட்டு வரு​வதாகவும் அவர் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்