பாஜக 65 தொகுதிகள் கேட்பதால் அதிர்ச்சியில் அதிமுக

பாஜக 65 தொகுதிகள் கேட்பதால் அதிர்ச்சியில் அதிமுக

2 mins read
e7e6327e-5727-44da-9cad-089c5470b338
அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அமித்ஷா. - படம்: த நியூஸ்மினிட்

சென்னை: வரும் சட்டபேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 65 தொகுதிகள் கேட்பதால் அதிமுக தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது. பாஜகவை எப்படியும் சமாதானப்படுத்தி 25 தொகுதிகள் கொடுக்கலாம் என அதிமுக முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டு நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது.

எஞ்சிய 16 தொகுதிகளில் பாஜக​வுக்கு இரண்​டா​மிடம் கிடைத்​தது. அடுத்​து, மக்​கள​வைத் தேர்​தலில் அதி​முக வில​கிய நிலை​யில் பாஜக 23 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டது.

இதில் 12 தொகு​தி​களில் இரண்​டா​மிடம் பெற்ற கட்​சிக்​கு, சட்​டப்​பேரவைத் தொகுதி வாரி​யான வாக்​கு​களில் 59 தொகு​தி​களில் இரண்​டாவது இடத்தில் வந்தது.

இவற்றை முன்​னிறுத்தி பாஜக​வின் தேசி​யத் தலைமை அதி​முக​விடம் 65 தொகு​தி​கள் கேட்​டுள்​ளது. இதற்கு வலு​வான காரண​மாக தமி​ழ​கத்​தில் பாஜக வளர்ந்து வரு​வ​தாக கட்​சித் தலைமை குறிப்​பிட்​டுள்​ளது.

அண்மையில், பிரதமர் மோடி​யின் மது​ராந்​தகம் கூட்​டத்​துக்​கும் சுமார் 5 லட்​சம் பேர் வந்​த​தாகவும் அவர்களில் பாஜக​வினர் மட்​டுமே சுமார் 3 லட்​சம் என்​பது தங்​கள் கட்​சி​யின் அபரிமித​மான வளர்ச்​சியைக் காட்​டு​வ​தாகவும் பாஜக வாதிட்டு அதிகமான தொகுதிகள் கேட்கிறது.

இந்நிலையில், தொகுதிப் பங்கீடு குறித்து பாஜகவினர், “இதுவரை எங்களுக்கு எவ்விதத் தகவலையும் தெரிவிக்கவில்லை. நட்புரீதியாக அதிமுகவின் முக்கிய தலைவர்களிடம் பேசும்போது, முந்தைய சட்டப்பேரவைத் தேர்தலில் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இப்போது அதைவிட 5 தொகுதிகள் கூடுதலாகக் கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

தமிழக பாஜகவின் முக்கிய மற்றும் பிரபல தலைவர்கள் அனைவரையும் களமிறக்க பாஜகவின் தேசிய தலைமை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஏற்கெனவே சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ள நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தேர்தலில் களமிறக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

இவர்​களு​டன் பிற பிரபலங்​களான பொதுச்​செய​லா​ளர் ராம சீனிவாசன், மாநிலச் செய​லா​ளர் வினோஜ் செல்​வம், செய்​தித் தொடர்​பாளர் நாராயணன் திருப்​ப​தி, ஆன்​மிகப் பிரி​வின் தலை​வர் எம்​.​நாச்​சி​யப்​பன், எஸ்​.ஜே.சூர்​யா, குஷ்பு, பொன்​னார், கே.டி.​ராகவன் உள்​ளிட்​டோரும் இப்​பட்​டியலில் இடம் பெற்​றுள்​ளனர். இவர்​களைத் தவிர கல்​வி​யாளர்​கள், தமி​ழறிஞர்​கள், ஓய்​வு​பெற்ற அதி​காரி​கள் என சில பிரபலங்​களை​யும் பாஜக களமிறக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியை இறுதி செய்துவிட்ட சூழலில், இன்னும் ஓரிரு கட்சிகள் கூட்டணிக்குள் வரலாம் என்பதால், தொகுதிப் பங்கீடு தொடர்பான விவரங்கள் வெளியிடுவதை அதிமுக சுணக்குகிறது என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்