தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாய்கள் விரட்டியதால் மரத்தில் ஏறிய கரடி: தூக்கம் தொலைத்த குன்னூர் மக்கள்

1 mins read
20a5c905-2f0a-4a0e-ad1e-5cf7e1b1f65b
குன்னூர் கக்காச்சி அருகே உள்ள மேல் பாரதி நகர் கிராமத்துக்கு வந்த கரடி, அங்கிருந்த நாய்கள் துரத்தியதால் மரத்தின் மீது ஏறி நின்றது. - படம்: இந்து தமிழ் திசை

குன்னூர்: குன்னூரில் நள்ளிரவில் நாய்கள் துரத்தியதால் காயமின்றி தப்பிக்க நினைத்த கரடி ஒன்று மரத்தில் ஏறி நின்றுகொண்டது. ஆனால், அதனைக் கண்ட மக்கள் அச்சத்தில் தங்கள் தூக்கத்தைத் தொலைத்தனர்.

மலைப்புற மாவட்டமான நீலகிரியில் கடந்த சில ஆண்டுகளாகவே வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருந்து வருகிறது.

இந்தச் சூழலில், குன்னூர் கக்காச்சி அருகே உள்ள மேல் பாரதி நகர் கிராமத்தில் நள்ளிரவு நேரத்தில் இரண்டு கரடிகள் சுற்றித் திரிந்துள்ளன. இதனைப் பார்த்த தெரு நாய்கள் அவற்றைத் துரத்தியதை அடுத்து, ஒரு கரடி அங்கிருந்து தப்பிவிட்டது.

மற்றொரு கரடி அங்கிருந்த கோயில் முன்பு இருந்த மரத்தின்மீது ஏறி நின்று கொண்டது.

இதுகுறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இரண்டு மணி நேரம் போராடி மரத்தில் இருந்த கரடியை வனத்துறையினர் அங்கிருந்து விரட்டியடித்தனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்