குழந்​தைச் செல்​வங்​கள்​தான் அதிச​யத் தேர்​தலுக்​கான ஆழமான காரணி​: விஜய்

குழந்​தைச் செல்​வங்​கள்​தான் அதிச​யத் தேர்​தலுக்​கான ஆழமான காரணி​: விஜய்

1 mins read
c571c88f-0ba9-4d09-a109-bd3e72df400a
குடும்​பத்​தையே தங்​கள் அன்​பால் வழிநடத்​திய குழந்​தைச் செல்​வங்​களால் வெற்றி சாத்தியமானது என்கிறார் விஜய். - கோப்புப் படம்: மணா ஸ்டார்ஸ்/ யூடியூப்
multi-img1 of 2

சென்னை: தமிழக மக்கள் மாற்​றத்​துக்​கான அரசியல் வெற்​றியை நிகழ்த்​திக் காட்​டியுள்ளதாகவும் அவர்களுக்குத் தன் வாழ்​நாள் நன்​றியை காணிக்​கை​யாக்​குவதாகவும் தவெக தலை​வர் விஜய் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், குழந்​தைச் செல்​வங்​கள்​தான் அதிச​யத் தேர்​தலுக்​கான ஆழமான காரணி​ எனக் குறிப்பிட்டுள்ளார்.

“கட்சி தொடங்கியதில் இருந்தே நம்மை ஏளன​மாகப் பார்த்​தவர்​களும் பேசி​ய​வர்​களுமே அதி​கம். அரசி​யலில் இது இயல்பே என்​று​தான் நாமும் அதைக் கடந்து வந்​தோம்.

“எவரை​யும் சாராமல், மக்​களை மட்​டுமே நம்​பி, தேர்​தல் களத்​தி​லும் துணிச்ச​லாக நின்​றோம். நடுநிலை என்ற பெயரிலும் விமர்​சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்​குப் பரிசளிக்​கப்​பட்​டன,” என்று விஜய் கூறியுள்ளார்.

ஏராள​மான காரணி​கள் இருந்​தா​லும், குடும்​பத்​தையே தங்​கள் அன்​பால் வழிநடத்​திய குழந்​தைச் செல்​வங்​கள்​தான் அதிச​யத் தேர்​தலுக்​கான ஆழமான காரணி​களில் ஒன்​றாக மாறி நிற்​பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்​திய அரசி​யல் களத்​தையே அதிர வைத்​திருக்​கும் தமிழகத் தேர்​தல் ஓர் அதிச​யத் தேர்​தல் என்றும் அது பல்​வேறு வகை​களி​லும் நிரூபண​மானது என்றும் விஜய்யின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​தேர்தல் அரசி​யல் போரில் வென்​றது தவெக வெற்றி மட்டுமல்ல, தமிழக மக்​களின் மனங்​களில் ஆசை ஆசை​யாக வளர்த்​தெடுக்​கப்​பட்ட உணர்​வு​பூர்​வ​மான ஜனநாயக​மும்​தான் என்று குறிப்பிட்டுள்ள திரு விஜய், இதன் காரணமாகவே தமிழகத்​தில் ஓர் அரசி​யல் கலா​சா​ர​மாகவே மாறி அச்​சுறுத்​திக் ​கொண்​டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்​டிப் புதைக்​கப்​பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்