தூத்துக்குடி: கனமழையினால் திருச்செந்தூர் கோயிலுக்கு வருவதை இரு நாள்களுக்குத் தவிர்க்குமாறு பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தால் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் திருச்செந்தூர், ஏரல்-திருச்செந்தூர் சாலையும் மழை வெள்ளத்தால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சாலைகளில் வெள்ளநீர் செல்வதால், மாற்று பாதைகளில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.