நாமக்கல்லில் முடங்கியது முட்டை ஏற்றுமதி: நாள்தோறும் ரூ.5 கோடி இழப்பு

நாமக்கல்லில் முடங்கியது முட்டை ஏற்றுமதி: நாள்தோறும் ரூ.5 கோடி இழப்பு

1 mins read
15019aa7-9e42-4395-b49d-f35ec69711a8
மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதல் காரணமாக கப்​பல் மூலம் முட்டைகளை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்​கப்​பட்​டுள்ளன. - கோப்புப் படம்: சமயம் தமிழ்

நாமக்கல்: மத்திய கிழக்கைச் சூழ்ந்துள்ள போர்ப் பதற்றம் காரணமாக நாமக்கல் பகு​தி​யில் கோழிப்பண்ணைத் தொழில் நலிவடைந்து வருவதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாள்தோறும் ரூ.5 கோடி இழப்பு ஏற்​படு​வ​தாக கோழிப்​பண்​ணை​யாளர்​கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கோழிப்பண்ணைகளுக்குப் பெயர் பெற்ற நாமக்கல் வட்டாரங்களில் நாள்தோறும் ஏறக்குறைய ஏழு கோடி முட்​டைகள் உற்​பத்தி செய்​யப்​படு​கின்​றன. இந்​தி​யா​வில் முட்டை உற்​பத்தியில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

மேலும், நாமக்கல்லில் இருந்து நாள்தோறும் 80 லட்​சம் முட்​டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்​யப்​படு​கின்​றன.

இந்நிலையில் மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதல் காரணமாக கப்​பல் மூலம் முட்டைகளை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்​கப்​பட்​டுள்ளன.

விமானம் மூலம் முட்டை ஏற்​றுமதி செய்​ய பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால் அதிலும் சிக்கல் நிலவுகிறது.

எனவே, நாள்தோறும் தேங்கும் முட்​டைகள் அனைத்​தும் தற்​போது உள்​ளூர் சந்​தைக்கு திருப்பி விடப்​பட்​டுள்ளன.

கடந்த மாதம் ரூ.5.40ஆக இருந்​த ஒரு முட்​டை​யின் பண்​ணைக் ​கொள்​முதல் விலை தற்போது ரூ.4.05ஆக உள்​ளது. ஒரு முட்டைக்கான உற்​பத்திச் செலவு ரூ.4.50ஆக உள்ளது.

கொள்முதல் விலை ரூ.4.50ஆக இருப்பதால், ஒரு முட்​டைக்கு 50 காசு போல் இழப்பு ஏற்படுவதாகவும், நாமக்​கல் வட்டாரத்​தில் கோழிப்​பண்​ணைத் தொழிலில் நாள்தோறும் ரூ.5 கோடி வரை நஷ்டம் ஏற்​படு​வதாகவும் கோழிப் பண்​ணை​யாளர்​கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்