சென்னை: உலக அளவில் ‘எட்ஜ் ஏஐ தளங்கள்’ உருவாக்கத்தில் தமிழகம் ஒரு முக்கிய மையமாகத் திகழ்கிறது என ‘எம்பெட்யூஆர் சிஸ்டம்ஸ்’ தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராஜேஷ் சுப்ரமணியம், அமெரிக்காவின் சிலிக்கான் வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனது நிறுவனம் தமிழகத்தில் ரூ.500 கோடி முதலீடு செய்யவிருப்பதாகக் குறிப்பிட்டார்.
“தமிழகத்தில் உள்ள சிறந்த தொழில்நுட்பத் திறமை, நிலையான கொள்கையால் அடுத்தகட்ட வளர்ச்சியாக ‘மாடல்நோவா’, ‘ஃபியூஷன் ஸ்டுடியோ’ ஆகிய மென்பொருள்களை அறிமுகம் செய்துள்ளோம். இதற்காக சென்னையில் 100 பொறியாளர்கள் பணியாற்றும் வகையில் ‘எட்ஜ் இன்டெலிஜென்ஸ்’ ஆய்வு மையத்தை எங்கள் நிறுவனம் அமைத்துள்ளது,” என்றார் ராஜேஷ் சுப்ரமணியம்.
தற்போது இம்மையத்தில் 400 பொறியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், 2026க்குள் இந்த எண்ணிக்கையை 550க்கும் மேலாக உயர்த்த தங்கள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஏஐ/எம்எல், தரவியல் நிபுணர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.

