சென்னை: பட்டாசுகளைத் திறந்த இடத்தில் வெடிக்கவேண்டும் என்றும் அருகில் தீப்பற்றும் பொருள்கள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தனிநபர்கள், சொத்துகள் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் ஏதும் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

