தோல்வியும் துரோகமும் திமுகவுக்குப் புதிதல்ல: டி.ஆர்.பாலு

தோல்வியும் துரோகமும் திமுகவுக்குப் புதிதல்ல: டி.ஆர்.பாலு

1 mins read
9ea2f00e-f90f-4af5-be92-972e2da7d990
டி.ஆர்.பாலு. - கோப்புப் படம்: நக்கீரன்

சென்னை: தோல்வியும் துரோக​மும் திமுகவுக்குப் புதிதன்று என்றும் தவெக கூட்டணிக்குச் சென்​றதன் மூலம் திமுக தலை​மையி​லான ஆட்சி அமை​யும் என்று நம்பி வாக்​களித்த மக்​களுக்கு காங்​கிரஸ் கட்சி பச்சைத் துரோகம் செய்துவிட்டது என்றும் திமுக பொருளாள​ரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்​.​பாலு குற்​றஞ்​சாட்​டி​ உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்கையில், எப்​போதெல்​லாம் காங்​கிரசுக்கு இக்​கட்​டான சூழலும் நெருக்​கடி​யும் உண்​டானதோ, அப்​போதெல்​லாம் திமுக உற்​ற தோழமையாக உடனிருந்​தது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குத் திமுக கொடுத்த விலை அதி​கம் என்றும் ஆனால், அதை இன்​முகத்​தோடு திமுக ஏற்றுக்கொண்டது என்றும் திரு பாலு தெரிவித்துள்ளார்.

“சமயச்​சார்​பற்ற முற்​போக்​குக் கூட்​ட​ணி​யில் பெரும்​பான்மை இடங்​களைப் பெற்​று, தேர்​தலைச் சந்​தித்​து, கூட்​ட​ணிக் கட்​சித் தொண்​டர்​களின் உழைப்​பால் வெற்றி பெற்ற ஐந்து எம்​எல்​ஏக்​களைப் பணயம் வைத்துக் கயமை​யுடன் மாற்று அணிக்​குச் சென்​றுள்​ளனர். பெரிய அரசி​யல், அரச தந்​திர முடிவை எடுத்​ததுபோல அதற்குக் கொள்கை முலாம் பூசி நியாயப்​படுத்த காங்​கிரஸ் கட்சி முயல்​கிறது,” என்று டி.ஆர்.பாலு சாடியுள்ளார்.

குறுக்கு வழி​யில் அதி​காரத்தை அடைய பாஜக பல்​வேறு மாநிலங்​களில் எதைச் செய்கிறதோ, அதையே காங்​கிரஸ் கட்சி தமிழகத்​தில் செய்​துள்​ளது என்று விமர்சித்துள்ள அவர், தோல்வியும் துரோக​மும் திமுகவுக்குப் புதிதன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.

“ஆனால், அவை நிரந்​தரம் அல்ல என்​பதும் எங்​களுக்குத் தெரி​யும். காலம் பதில் சொல்​லும்,” என்று டி.ஆர்.பாலுவின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்