சென்னை: ராம்கோ சூப்பர்கிரீட் சிமென்ட் வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ - ‘சீர்மிகு பொறியாளர் விருது’ வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
கட்டுமானத்திலும், கட்டமைப்பிலும் தனித்துவத்துடன் செயலாற்றி வரும் பொறியாளர்களைச் சிறப்பிக்கும் வகையில் ராம்கோ சூப்பர்கிரீட் சிமென்ட் வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ - ‘சீர்மிகு பொறியாளர் விருது’, ‘வளர்மிகு பொறியாளர் விருது’, ‘திறன்மிகு பொறியாளர் விருது - 2024’ வழங்கும் விழா சென்னை தி.நகரில் உள்ள வாணி மகாலில் நடைபெற்றது.
ரினாகான் ஏ.ஏ.சி. ப்ளாக்ஸ், டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனப் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து விருதுகளை வழங்கின. 19 பேருக்குச் சீர்மிகு பொறியாளர் விருது, 7 பேருக்கு திறன்மிகு பொறியாளர் விருது, 36 பேருக்கு வளர்மிகு பொறியாளர் விருது என மொத்தம் 62 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் கே.அசோகன் வரவேற்றுப் பேசும்போது, ‘‘இந்து தமிழ் திசை சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு அன்பாசிரியர் விருது, அறிவியலில் சிறந்து விளங்கும் குழந்தைகளுக்கு நாளைய விஞ்ஞானி விருது, சிறந்து விளங்கும் பொறியாளர்களுக்கு சீர்மிகு பொறியாளர் விருது எனப் பலதரப்பட்ட துறைகளைச் சேர்ந்தோர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்படுகின்றனர்.
இயற்கைப் பேரிடர்களையும் தாங்கி நிற்கும் உறுதியான கட்டுமானங்களை உருவாக்க புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்று திரு அசோகன் வலியுறுத்தினார்.