விவசாய உற்பத்​தியை மேம்படுத்த உதவும் தகவல் தொழில்​நுட்பம்

1 mins read
d4424f33-8a8e-4ab8-a92c-84a8be623f29
புரிந்துணர்வு ஒப்பந்​தத்​தில் மத்திய வேளாண் அமைச்சின் இணைச் செயலாளர் சாமுவேல் பிரவீன் குமார், சென்னை ஐஐடி ஸ்டார்ட்​-அப் நிறு​வனங்கள் ஆராய்ச்சி மையத்​தின் இயக்​குநர் ஏ.தில்​லைராஜன் ஆகியோர் கையெழுத்​திட்​டனர். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: விவசாய உற்பத்​தியைத் தகவல் தொழில்​நுட்ப உதவியோடு மேம்​படுத்​தும் புதிய திட்​டத்தைச் செயல்​படுத்துவது தொடர்பாக மத்திய வேளாண் அமைச்​சுக்கும் சென்னை ஐஐடி கல்வி நிலையத்துக்கும் இடையே புரிந்​துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்தத் திட்டத்துக்கு ‘விஸ்​டார்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை ஐஐடி வெளி​யிட்ட செய்திக்​குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தகவல் தொழில்​நுட்ப வசதிகள் மூலம் வேளாண் உற்பத்தி, வேளாண் விரிவாக்க முறைகளை மேம்​படுத்​தும் நோக்​கில் ‘விஸ்​டார்’ திட்டத்தை மத்திய அரசு சோதனை அடிப்​படை​யில் செயல்​படுத்த உள்ளது.

“இதற்கான புரிந்​துணர்வு ஒப்பந்தம் டெல்​லி​யில் அண்மையில் கையெழுத்​தானது,” என்றும் சென்னை ஐஐடி மேலும் குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்