சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை

2 mins read
cf2df757-08a0-4202-a28d-9ad38954589c
சீமான். - படம்: ஊடகம்

புதுடெல்லி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு விசா​ரணைக்கு உச்ச நீதி​மன்​றம் இடைக்​காலத் தடை விதித்​துள்​ளது.

இருதரப்பும் சமரச​மாகப் பேசி முடி​வெடுக்க வேண்​டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

திரு​மணம் செய்துகொள்​வ​தாக உறுதியளித்து, தன்னைப் பாலியல் ரீதியில் பயன்படுத்திக்கொண்டு, பின்னர் ஏமாற்​றி​விட்​டார் சீமான் என்பதுதான் நடிகை விஜயலட்​சுமி எழுப்பியுள்ள புகார்.

கடந்த 2011ஆம் ஆண்டு அவர் சென்னை வளசர​வாக்​கம் காவல் நிலையத்தில் அளித்த புகார் கடந்த காலங்களில் அவ்வப்போது பரபரப்பையும் சில விவாதங்களையும் ஏற்படுத்தி வந்தது. தற்போது ஏறக்குறைய 15 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இந்தப் பாலியல் புகார் வழக்கு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த வழக்கை ரத்து செய்​யக்​கோரி, சீமான் உயர் நீதி​மன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்​திருந்தார். அதை விசாரித்த தனி நீதிப​தி, பாலியல் வழக்கை ரத்து செய்ய முடி​யாது எனக் குறிப்பிட்டு மனுவைத் தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து, சீமான் சார்பாக சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனு நீதிபதி பி.​வி.​நாகரத்னா தலை​மையி​லான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தபோது, சீமானின் அரசி​யல் பொது​வாழ்​வுக்கு கடும் பாதிப்பு ஏற்​பட்​டுள்​ளதாக அவரது தரப்பில் வாதிடப்பட்டது.

நடிகை விஜயலட்​சுமி​யுடன் தனிப்​பட்ட முறை​யில் பேச்​சு​வார்த்தை நடத்தி உரிய இழப்​பீடு வழங்க முயற்​சிகள் மேற்​கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சீமான் மீதான பாலியல் வழக்​கின் விசா​ரணைக்கு இடைக்​காலத் தடை விதிப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை மே மாதத்​துக்கு தள்ளி வைத்தனர்.

எனினும் இந்தக் கால அவகாசத்தை பயன்படுத்தி, விஜயலட்சுமிக்கு உரிய இழப்​பீடு வழங்​கு​வது தொடர்​பாக இருதரப்​பிலும் சமரச​மாக பேசி முடி​வெடுக்க வேண்​டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

குறிப்புச் சொற்கள்