தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழறிஞர் வா.மு.சேதுராமன் மறைவுக்கு தலைவர்களும் தமிழார்வலர்களும் அஞ்சலி

1 mins read
d1795a4d-ccf7-42ce-a6b4-fc8669fe1b16
தமிழறிஞர் வா.மு.சேதுராமன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். - படம்: ஊடகம்

சென்னை: தமிழறிஞர் வா.மு.சேதுராமன் காலமானார். அவருக்கு வயது 91.

மூத்த தமிழறிஞர் பெருங்​கவிக்கோ வா.​மு.சேது​ராமன் ​(91) உடல்​நலக்​குறைவு காரண​மாக சென்​னை​யில் வெள்ளிக்கிழமை கால​மா​னார்.

ராம​நாத​புரம் மாவட்​டம், முதுகுளத்​தூர் அருகே ஆண்​ட​நாயகபுரத்​தில் 1935ஆம் ஆண்டு பிறந்த சேது​ராமன், சென்னை பல்​கலைக்​கழகத்​தில் முனை​வர் பட்​டம் பெற்​றார். விரு​கம்​பாக்​கம் சின்​மயா நகரில் குடும்​பத்​துடன் வசித்து வந்​தார். அவருக்கு மகன்​கள் திரு​வள்ளுவர், க​வியரசன், ஆண்​டவர், தமிழ் மணி​கண்​டன், மகள் பூங்​கொடி உள்​ளனர்.

நெஞ்​சத்​தோட்​டம், ஐயப்​பன் பாமாலை, தமிழ் முழக்​கம், தாய்​மண், சேது காப்​பி​யம் உள்பட ஏராள​மான நூல்​களை எழு​தி​யுள்​ளார்.

ஒரு லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட கவிதைகளை பதிப்​பித்​துள்​ளார். பன்​னாட்டு தமிழுறவு மன்​றத்​தின் நிறு​வன​ராக இருந்த இவருக்​கு, பெருங்​கவிக்​கோ, செந்​தமிழ்க் கவிமணி போன்ற பட்​டங்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. திரு​வள்​ளுவர் விருது, கலை​மாமணி விருது, சி.​பா.ஆ​தித்​த​னார் மூத்த தமிழறிஞர் விருது உள்​ளிட்ட பல்​வேறு விருதுகளை பெற்​றுள்​ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காவல்துறை மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது.

வா.​மு.சேது​ராமன் உடலுக்கு முதல்​வர் ஸ்​டா​லின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் தமிழார்வலர்களும் கலந்துகொண்டு அஞ்​சலி செலுத்​தி​னர்.

குறிப்புச் சொற்கள்
தமிழ்தமிழ் நாடுதமிழறிஞர்