தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2025ல் மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு

1 mins read
669c61c2-bf20-4486-8594-6525e6874fe6
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 63 பணிகள் நடைபெறுகின்றன. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு குறித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கேள்விக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: “மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 63 பணிகள் நடைபெறுகின்றன. அதில் 40 பணிகள் உபயதாரர்கள் மூலம் நடைபெறுகின்றன.

“கோவிலில் உள்ள வீர வசந்தராயர் மண்டபத்தில் 2018ல் தீவிபத்து ஏற்பட்ட நிலையில், சீரமைப்புப் பணி நடைபெறுகிறது. வசந்தராயர் மண்டபத்தைப் புதுப்பிக்கத் தேவைப்படும் 25 அடி நீளம் கொண்ட கல் தூண்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

“கற்கள் பெற தலைமைச்செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி அனுமதி பெறப்பட்டது.

“25 அடி நீளம் கொண்ட கல்லைப் பெறுவதற்காக ரூ.19 கோடியில் ஒப்பந்தம் கோரப்பட்டு போர்க்கால அடிப்படையில் பணி நடைபெற்று வருகிறது.

“மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அடுத்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் குடமுழுக்கு நடைபெறும் என்று அமைச்சர் சேகர் பாபு அறிவித்தார்.

குறிப்புச் சொற்கள்