சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக தேர்தல் களம் கண்ட தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
அதாவது, அக்கட்சி 34.92 விழுக்காடு வாக்குகளை அள்ளி திமுக, அதிமுக பாரம்பரிய கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்தது.
இதையடுத்து, கடந்த மே 10ஆம் தேதி தமிழகத்தின் முதல்வராக விஜய் பதவியேற்றார்.
இந்நிலையில், தவெகவின் உறுப்பினர் சேர்க்கை தற்போது இரண்டு கோடியைக் கடந்துள்ளது.
தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட கட்சிகளில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட முதல் கட்சியாகத் தவெக தற்போது உருவெடுத்து இருக்கிறது.
இதனைச் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டு தவெகவினர் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.

