தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

என் இதயம் நொறுங்கிப் போய்விட்டது: விஜய்

1 mins read
96ba4bd9-c1be-4f93-b985-8846ecd05d34
கரூர் கூட்டத்தில் விஜய் பேசிக்கொண்டிருந்தபோது அவர் மீது மர்ம நபர் ஒருவர் திடீரெனக் காலணி ஒன்றை வீசினார். விஜய்யின் பின்புறத்தில் இருந்து வீசப்பட்ட அந்தக் காலணியை அவரது பாதுகாவலர்கள் தடுத்தனர். - படம்: ஊடகம்

கரூர்: தவெக தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு பிரசாரக் கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் 36 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்துயரச் சம்பவத்தைச் செரிக்க இயலாமல் மக்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், தனது இதயம் நொறுங்கிப் போய்விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.

“கரூரில் உயிரிழந்த எனதருமைச் சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

“மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்,” என்றும் விஜய் மேலும் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்