தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வடகிழக்குப் பருவமழை: மெட்ரோ ரயில் கட்டுமானத் தளங்களில் 603 நீர் இறைப்பிகள் தயார்

1 mins read
4c32f120-6488-422d-b1a8-6d4409c16d68
வடகிழக்குப் பரு​வ​மழை அக்டோபர் மாதத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்திலிருந்து தொடங்​க​வுள்​ளது. சென்​னை​யில் வெள்ளம் ஏற்படாமல் இருக்க முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை சென்னை மாநக​ராட்சி நிர்​வாகம் எடுத்து வரு​கிறது. - படம்: இணையம்

சென்னை: தமிழகத்தின் சென்னை மாநகரத்தில் வடகிழக்குப் பரு​வ​மழை தொடங்​க​வுள்ள நிலை​யில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கான கட்டுமானத் தளங்களில் முன்​னெச்​சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வெள்ளம் ஏற்படாமல் தடுக்க, அவ்விடங்களில் 603 நீர் இறைப்பிகள் (pumps) தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

இவ்வாண்டில் வடகிழக்குப் பரு​வ​மழை அக்டோபர் மாதத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்திலிருந்து தொடங்​க​வுள்​ளது. இதற்​கிடை​யே, சென்​னை​யில் வெள்ளம் ஏற்படாமல் இருக்க முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளைச் சென்னை மாநக​ராட்சி நிர்​வாகம் எடுத்து வரு​கிறது.

மாதவரம் - சிறுசேரி சிப்​காட் வரையி​லான வழித்​தடத்​தில் 292, கலங்​கரை​ விளக்​கம் - பூந்தமல்லி வரையி​லான வழித்​தடத்​தில் 151, மாதவரம் - சோழிங்​கநல்​லூர் வழித்​தடத்​தில் 160 என நீர் இறைப்பிகள் தயார் நிலை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளன.

இதன்​மூல​மாக, மழைக்​காலத்​தின்போது ஏற்​படக்​கூடிய எந்​தவொரு சூழ்​நிலை​யை​யும் சமாளிக்க மெட்ரோ ரயில் நிர்​வாகம் தயா​ராக உள்​ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுத​விர சென்னை மாநக​ராட்​சி, மெட்ரோ ரயில் நிறு​வனம், தமிழக நீர்​வளத்துறை, தமிழக நெடுஞ்​சாலைத்துறை ஆகியவை இணைந்து தொழில்​நுட்​பக் குழுவை அமைத்​துள்ளன.

சென்​னை​யில் கடந்த ஆண்டு 27 இடங்​களில் மழைநீர் முன்​னெச்​சரிக்கை நடவடிக்கைகள் எடுக்​கப்​பட்​டன. இவ்வாண்டிலும் அதேபோல், முன்​னெச்​சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்