சூறாவளிக் காற்றுடன் மழை: ஒரு லட்சம் வாழை மரங்கள் சேதம்

1 mins read
a58ac03a-5bcb-40ef-8b31-b4d4b006e40d
நூறாயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமானதாக விவசாயிகள் தெரிவித்தனர். - கோப்புப்படம்: ஊடகம்

கோவை: பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.

இப்பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பல வகையான வாழை ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. கடந்த ஒரு மாதமாக அங்கு வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது.

இந்நிலையில், திடீரென சூறைக்காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது.

இதில், நூறாயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமானதாக விவசாயிகள் தெரிவித்தனர். மேலும், இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

மேலும், சூறாவளிக் காற்றால் பாதிப்புக்குள்ளான அனைத்து பகுதிகளையும் முறையாக ஆய்வு செய்து கணக்கெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

குறிப்புச் சொற்கள்